பிரான்சில் சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மூன்று சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.இதன்போது நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுக்கொண்டிருந்த கைதி தப்பியோடியுள்ளார். பிரான்சின் நோமன்டியின் ருவன் என்ற நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.